அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Sangameswarar Temple, Townhall, Coimbatore - 641001, Coimbatore District [TM009784]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் பத்தாம் நுற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி முகலாய மன்னன் திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையாக இருந்தது, அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்க முடியாமல் தானிருந்த கோட்டை தரைமட்டமாக்கி மணற்மேடாக ஆக்கி சென்று விட்டார். அதனால் கோட்டை மணற்மேடு ஆக இருந்த காரணத்தினால் கோட்டை ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம்
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க...அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் பத்தாம் நுற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி முகலாய மன்னன் திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையாக இருந்தது, அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்க முடியாமல் தானிருந்த கோட்டை தரைமட்டமாக்கி மணற்மேடாக ஆக்கி சென்று விட்டார். அதனால் கோட்டை மணற்மேடு ஆக இருந்த காரணத்தினால் கோட்டை ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம்
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க கடக்கவே கிடைக்கிறதோ அதை உணர்த்தக்கூடிய மலராக உள்ளது. இந்த மலரானது ரத்தத்தை சுத்திகரிக்கும் மருத்துவ குணமும் கொண்டது. இதுவே இத்தலத்தின் ஸ்தல விருட்சமாகவும் விளங்குகிறது. அதனாலேயே இக்கோயிலை மகிலாரண்யேஷ்த்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வருகை புரிந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு அனைத்து நலன்கலும் வளங்களும் நல்ல காரியங்களும், மன நிம்மதியும் கிடைக்கப்பெறும்.
பெயர் காரணம்
இப்பகுதி சங்கு புஷ்பங்கள் நிறைந்த காடுகளாக இருந்ததாலும், விஜயநகர போரரசின் சங்கு வம்சத்தினர் வழிபட்டு வந்ததாலும் சுவாமி பெயர் சங்கீஸ்வரமுடையார், சோழீஸ்வரமுடையார், சங்கமேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி. இறைவி அகிலாண்டேஸ்வரி சன்னதியில் பிரதி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சக்கர பூஜையும், கல்யாணம் ஆகாத ஆடவர், பெண்களுக்காக சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்கள் நடைபெறுகிறது. இதன்மூலம் திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தடை நிவர்த்தியாகியும், அன்யோன்யம் இல்லாத தம்பதியினர் இந்த சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்களில் கலந்து கொள்வதால் அன்யோன்யம் அதிகரித்து இல்வாழ்க்கையில் உமையோர் பாகனை போல் பிரியாமல் மனம்ஒத்த தம்பதியராக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பிரதி பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக செய்யப்பட்டு கலந்து கொள்ளும் அனைத்து சுமங்கலிகளுக்கும் சௌபாக்கிய திரவியங்களுடன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
முருகப்பெருமானின் பெயர் ஆனந்த கோலாகல சத்ருசம்கார சண்முக சுப்ரமணியர் இங்கு சண்முக சுப்ரமணியர் சுவாமி அம்பாளுக்கு நடுவில் சோமாஸ் கந்தமூர்த்த அமைப்பில் வீற்றிருக்கிறார். முருகப்பெருமான் திருவுருவத்திற்கு முன்பு கீழே பாலதண்டாயுதபானி சுவாமி திருஉருவம் வீற்று அருள்பாலிக்கிறார். ஒரே கருவறையில் இரண்டு சுவாமி முகுர்த்தங்கள் வீற்று இருப்பது அரிதான ஒன்றும் கூட.இந்த ஐராவதம் என்று அழைக்கப்படும் ஆயிரம் தந்தங்கள் பலம் கொண்ட வெள்ளையானையானது தேவயானையை வளர்த்த காரணத்தினாலும், தேவயானைக்கு பிரியமுடையதாகவும் இருந்ததால் தேவயானையை முருகப்பெருமானனுக்கு மணமுடித்து கொடுக்கும்பொழுது மணமகள் வீட்டு சீதனமாக கொடுக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலே நான்கு ஸ்தலங்களில் மட்டுமே முருகப்பெருமானுக்கு ஐராவதம் எனப்படும் வெள்ளையானை வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
1. சுவாமிமலை
2. திருத்தணி
3. உத்திரமேரூர் (காஞ்சிபுரம் அருகில்)
4. நமது திருக்கோயில் (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்)
செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு சத்ருசம்கார திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மண் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.திரிசதி அர்ச்சனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் மந்திரம் தந்திரம் எந்திரம் மற்றும் ஒளடிதம் எனப்படும் வைப்பு மருந்து ஆகியவற்றால் வரக்கூடிய எதிர்மறையான ஆபிச்சரமமான விஷயங்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவும் மிகவும் பயனளிக்கிறது. ஒவ்வொரு கிருத்திகை, வளர்பிறை சஷ்டி போன்ற விஷேச தினங்களில் சண்முகா அர்ச்சகனை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.