அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் பத்தாம் நுற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி முகலாய மன்னன் திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையாக இருந்தது, அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்க முடியாமல் தானிருந்த கோட்டை தரைமட்டமாக்கி மணற்மேடாக ஆக்கி சென்று விட்டார். அதனால் கோட்டை மணற்மேடு ஆக இருந்த காரணத்தினால் கோட்டை ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம் இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க...