திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் வெள்ளகோவில் என்ற ஊரிலிருந்து வடக்குத் திசையில் ஈரோடு செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் மாந்தபுரம் என்ற ஊரின் கிழக்குப் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு நோக்கிய ஒரு தனிச் சன்னதியில் அருள்மிகு நாட்டராய சுவாமியும், அருள்மிகு நாச்சிமுத்து அய்யன் சுவாமியும் ஒரே பீடத்தில் இரட்டையர்களாகவும், மூலவர்களாகவும், பிரதான மூர்த்திகளாகவும் இணைந்து எழுத்தருளி அருளாட்சி புரிந்து வருகிறார்கள். அங்கும் இங்கும் என்னாதபடி பச்சைப் பசேல் என எங்கெங்கும் கொஞ்சும் ஊஞ்சவனச் சோலைக்கு மத்தியில், எழிலானதொரு இயற்கைச் சூழலில், தொன்மையும், தெய்வீகத் தன்மையும் கொண்ட, அளப்பரும் சக்தி மிக்க அருள்மிகு நாட்டராயசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அன்று தொடங்கிய அவர்களின் அருளாட்சிதான் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக,...