இத்திருக்கோயில் கொங்கு வேளாள கவுண்டர்களின் கொங்கு சேரலான், பூசன் குலத்தவர்களுக்கும், கொங்கு செட்டியார்களுக்கும் குலதெய்வ திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா நடைபெறும். பிரதி வாரம் செவ்வாய், வெள்ளி மற்றும் பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்கள் விஷேச தினங்களாகும். பௌர்ணமி நாட்களில் தங்க தேரோட்டம் நடைபெறும். 27 நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரத்திற்கு உகந்த கோயிலாகும்.