1.இத்திருக்கோயில் திருப்பூர் மாநகர பகுதியிலிருந்து 5 கீ.மீ தொலைவில் நல்லூர் எனும் நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ளது. 2.இத்தலம் இப்பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற சிவன் ஸ்தலமாகும் 3.இத்தலம் இப்பகுதி மக்களால் பெருமளவு இஷ்ட தெய்வமாக வழிபட்டு வருகிறது, 1.அருள்மிகு விநாயகர் சன்னதி 2.அருள்மிகு விசாலாட்சியம்மன் சன்னதி 3.அருள்மிகு சுப்ரமணியர் சன்னதி 4.அருள்மிகு நடராஜர் சன்னதி கொடுமணல் இலக்கியங்களில், சோழியம்மன் விசுவேசர் சுந்தரி விசாலாட்சி தாளிணையை எப்போதும் தயவாய்ப் பணியும்மன்னன் விசுவேசர் தன்னுடனே விசாலாட்சி உமைவாழி வில்லால் அடிபட்ட விசுவேஸ் வரநாதா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நல்லூரில் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயில் மிகவும் சிறப்புடன் இருக்கும் தன்மை பெறப்படுகிறது. விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலைச் சில ஆவணங்கள் காசி விஸ்வநாதர் கோயில் என்று குறிக்கின்றன.இக்கோயில் கல்வெட்டில் காசி விஸ்வேஸ்வரர் எனக் குறிக்கப்படுகிறது. பழமையான இக்காசி விஸ்வநாதர் கோயில் கலியுகம் 4814-ம் ஆண்டு திருப்பணி...