சமய குரவர்களால் பாடல் பெற்ற ஆலயங்கள் கொங்கு நாட்டின் ஏழேயிருப்பினும், சிறப்பு மிகுந்த பிற கோவில்கள் பல உண்டு.புகழ் மிக்க பூந்துறை நாட்டின் தலைமை ஊர்களில் ஒன்றாக ஆயிரம் ஆண்டுகாளக வரலாற்றுச் சிறப்புடன் விளங்கும் நகரம் ஈரோட மாநகர் இவற்றின் சிறப்புகளில் ஒன்று அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் புனித காவிரி ஆறு ஓடுகிறது. இத்திருக்கோயிலின் அருகிலேயே அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பாகும். சிவன் கோயிலும், வைணவ கோயிலும் அருகருகே அமைந்திருப்பது இந்து மத ஒற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது. ஈரோடு மாநகரின் பழமையும் மேன்மையும் வாய்ந்த பகுதியாக கோட்டையில் தொண்டீசுவரர் அமர்ந்தருள் புரியும் ஆருத்ர...