இத்திருக்கோயிலில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மேற்கு நோக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்திருக்கோயில் அமைப்பானது கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் மற்றும் சுற்றுப்பிரகாரத் தளம் ஆகியவற்றுடன் அமைந்து உள்ளது. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி சன்னதி முழுவதும் நன்கு செதுக்கப்பட்ட கருங்கற்களால் அதிட்டான வர்க்கங்களுடன்சுவர், பிரஸ்தரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு பளபளப்பு செய்யப்பட்டுள்ளது. மூலவர் சன்னதியின் பின்புற பகுதியில் சண்முகர் வள்ளி தெய்வானை உற்சவர் சன்னதி மற்றும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உற்சவர் சன்னதி ஆகிய இரண்டு உற்சவர் சன்னதிகள் உள்ளது. மூலவர் சன்னதியின் தென் மேற்கு பகுதியில் ஸ்ரீ வித்யா கணபதி சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சன்னதியும் அமைந்துள்ளது. ஸ்ரீ மரகதீஸ்வரர் சன்னதியும்,...