இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள அம்மன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கே உள்ள முருகப்பெருமான் இளமை தோற்றத்துடன் கையில் தண்டுடன் இடையில் கோவணத்துடன் உச்சிக்குடுமியுடன் முத்துக்குமாரசுவாமி கிழக்கு நோக்கி காட்சி தருவது ஒரு சிறப்பு. வருபவரை எல்லாம் என்று வந்தனை என்று கேட்கும் தோரணையுடன், முகத்தில் குறுஞ்சிரிப்புடன், அழகு தவழும் தோற்றத்துடன் காண்போரை எல்லாம் சுண்டி இழுக்கும் காந்த பிரானாக சபந்த பிரானாக இந்த முருகன் திகழ்கிறார்.