இத்திருக்கோயிலுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக தெரியவருகிறது இத்திருக்கோயிலின் வரலாறானது மைசூரை ஆண்ட மன்னரின் முக்கிய தளபதி அவர்களால் சாமுண்டியம்மன் இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டதாக வாய்மொழி வரலாறு கூறுகிறது. மேற்படி திருக்கோயில் அமைக்கப்பட்ட காலம் தெரியவரவில்லை. இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் நான்குபட்டை, எட்டுப்பட்டை, போதிகை அமைப்புகளுடன் தூண்கள் உள்ளது.