மூர்த்தி காவிரி தீர்த்தம் என்பவற்றால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன் பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட நடுவில் உயர்ந்து அகத்தியர் வியாக்ரபாதர்பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறை மீது அமைந்து உள்ளது நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில். காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால் இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி மண் தலமாகக் கருதி வழிபடப் படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர...