அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.இத்திருக்கோயில் 5- நிலை இராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. மாத கிருத்திகை அதன் சிறப்பு பூஜைகள் நடைபெரும் மற்றும் மாத சஷ்டிகளிலும் பூஜை சிறப்பான முறையில் நடைபெறும்.இத்திருக்கோயிலின் எதிரில் திருமுருக கிருபானந்தவாரியார் மடம் உள்ளது.இத்திருத்தலத்தில் பிரதி மாதக் கிருத்திகை, சித்திரைக் திங்கள், தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக்கருத்திகை, கந்த சஷ்டியில் 8- நாள் விழா, கார்த்திகை திருவிழா, ஆருத்ரா, தைத்திருவிழா, மாசிமாத பிரமோற்சவம் 10- நாள் விழா, மாசி விசாக இலட்சதீபத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய பல திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இத்திருத்தலத்தில் தினமும் 25- நபர்களுக்கு அன்னதான மதியம் 12.00...