வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய 110 அடி உயர கிழக்கு இராஜ கோபுரத்தினையும், திருவாரூர் தேர் அழகு திரிவிரிஞ்சை மதில் அழகு எனப் போற்றப்படும் அளவிற்கு 42 அடி உயர வானளாவிய திருமதிற்சுவர்கள், ஐந்து பிரகாரங்கள், இரட்டை அடுக்கு திருமாளிகைபத்தி மண்டபங்கள், சிறந்த கலை நுட்பத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த வட, தென்பிரகார திருக்கல்யாண மண்டபங்கள், நூற்றுக்கால் மண்டபம், சூரியத் தீர்த்தம், சிம்மத்தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று வகையான தீர்த்தங்கயையும் கொண்டுள்ளது. சுமார் 13987 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த இத்திருத்தலத்தின் சிம்மத்தீர்த்தம் ஆதி சங்கரரால் எந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை கடை(சி) ஞாயிறு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தைப்பேறு வேண்டி...