பேராவூரணி வட்டம் பேராவூரணி - பெருமகளுர் சாலையில் பேராவூரணி நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருவதற்கு திருச்சிராப்பள்ளி நகரில் இருந்தும் அறந்தாங்கி, பேராவூரணியில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. தலச்சிறப்பு இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சோமநாத சுவாமி, அம்பாள் அருள்மிகு சுந்தர நாயகி. திருக்கோயில் அருகில் அழகிய திருக்குளம் உள்ளது. திருக்கோயில் அருகில் அருள்மிகு பால சுப்பிரமணிசுவாமி மேற்படி ஆலயத்தில் உபகோயிலாகவும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருகில் உள்ள இதன் உபகோயில் மிகவும் தொன்மையானதும், பழைமையானதும் ஆகும். திருக்கோயில் அமைப்பு இத்திருக்கோயில் அமைந்துள்ள சாலையில் இருபுறம் மரங்களும் வயல்களும் சூழ்ந்து இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. முன்...