திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது . இத்திருக்கோயிலில் பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகும் . இத்திருக்கோயிலில் வருடாவருடம் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெற்று வருகிறது . பக்தர்கள் தங்கள் உயிர் போகும் தருவாயில் ஸ்ரீ அம்பாளை வேண்டி அம்மனுக்கு பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள் , தங்கள் உடல் நலமடைந்தவுடன் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் ஒருவர் இறந்தால் எப்படி பாடையில் படுக்க வைத்து எடுத்துச் செல்வார்களோ அதேபோல் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பாடையில் படுத்து உறவினர்களுடன் திருக்கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து...
| 06:00 AM IST - 01:00 PM IST | |
| 04:00 PM IST - 09:00 PM IST | |
| 01:00 PM IST - 04:00 PM IST | |
| காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். விழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது | |