தஞ்சையை அரசாண்ட மன்னனான ஸ்ரீ பிரதாபசிம்ம மன்னரால் அபிமானிக்கப்பட்டுள்ள நீடாமங்கலம் சரகத்தை சேர்ந்த முல்லைவாசல் கிராமத்தில் சர்வேஸ்வரன் ஸ்ரீ கற்பகவல்லி சமேத ஸ்ரீ முல்லைவனநாத ஸ்வாமியாக கட்சி அளிக்கின்றார். புண்ணிய நதி காவிரியில் பிரியும் கோரையாறு மற்றும் வெண்ணாற்றின் நடுவில் நீடாமங்கலத்திற்கு கிழக்கே ௩ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.பி.12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சுதகானப்ப நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுள்ளன. கல்லில் பொறிக்கப்பட்ட ஷை யாரின் உருவம், பிரகாரத்திலும் அர்த்த மண்டபத்திலும் ஈஸ்வரனை துதிக்கும் கோலத்தில் பொருத்தி கட்டப்பட்டிருக்கிறது.