அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் புள்ளமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது. கருவறையில் அருள்மிகு காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், அருள்மிகு விசாலாட்சி அம்பாள் தெற்கு நோக்கியும் ஒரே மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்கள். திருக்கோயிலில் ஒரு பிரகாரம் உள்ளது. மேற்கு பகுதி பிரகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர், ஆஞ்சநேயர்,துர்க்கை,சண்டிகேஸ்வரர், மற்றும் நவக்கிரகம் தனி சன்னதியில் உள்ளது. திருக்கோயிலுக்கு எதிரில் திருக்குளம் அமைந்துள்ளது. அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில் புள்ளமங்கலத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.