திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருக்கொள்ளம்புதூர் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருஞானசம்மந்தரால் பாடல்பெற்ற திருக்கோயில் ஆகும். பஞ்சாரண்யஸ்தலங்களுள் அர்த்தசாமபூஜை வழிப்படக்கூடிய திருக்கோயிலாகும்.