அருள்மிகு நீநெறிநாதசாமி திருக்கோயில், தண்டலைச்சேரி- 614713, திருத்துறைப்பூண்டி வட்டம், தி௫வாரூர் மாவட்டம் . இத்திருக்கோவிலானது காவிரி தென் கரை தலங்களில் 110 வைத்து தலமாகும் .திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி :நீணெறி நாதர் (ஸ்திர புத்தீஸ்வரர் ) அம்பாள்:ஞானம்பிகை அரிவாட்டா நாயனார் பிறந்த தலம் . தை மாதம் திருவாதிரை நாளில் அறிவாட்ட நாயனார் குரு பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் . மனநலம் குன்றியவர்கள் மற்றும் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை .