காலத்தால் தொன்மை வாய்ந்த மெய்ஞனத்தால் புகழபெற்று விளங்குகின்ற செந்தமிழ நாட்டில் விண்ணை முட்டும் வண்ணமிகு கோபுரங்களும் வானளாவிய விமானங்களும் கொண்ட தெய்வமணம் பரப்பும் திருத்தங்கள் பலப்பல. செந்நெல்வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் வான்பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரித்தாயின் தென்கரையில் அமைந்துள்ள 82வது சிவத்தலமாக இத்தலம் விளங்ககுகிறது. சப்தவிடங்கர் தலங்களில் ஒன்றாகவும் ஐந்து ஆட்சி பிடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது- சித்தர்களில் பிடங்களில் ஒன்றான அழுகணி சித்தர் பிடம் அமைந்த தலமாககும்.