இவ்வாலயத்தில் விநாயகர், சுப்ரமணியசுவாமி, காத்தவராயர், பெரியாச்சி, அய்யனார், ஸ்ரீ எல்லையம்மன் சன்னதி உள்ளது. ஸ்ரீ எல்லையம்மன் தனிக்கோவிலாக அமையப்பெற்று எல்லா பரிவாரங்களையும் கொண்ட ஆலயம் ஆகும். இவ்வாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். மேற்படி திருவிழாவில் ஸ்ரீ காத்தவராய சுவாமி கழுவேறும் ஐதீகம் செடில் உற்சவமாக, செடில் உற்சவம் நடைபெறும். இவ்விழாவானது தமிழ் நாட்டிலேயே தொன்மையான சிறப்பு வாய்ந்த விழாவாகும். செடிலில் குழந்தைகளை வைப்பது முக்கிய பிரார்த்தனையாகும். மேலும் காவடி, மாவிளக்கு, பால் அபிஷேகம், அங்க பிரதட்சனம் போன்றவை நடைபெறும். இந்த ஆலய விழாவானது நாகை நகரிலேயே முக்கிய திருவிழாவாக பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஸ்தலம் முக்கியமான பிரார்த்தனை ஸ்தலமாகும்.