முழுமுதற் கடவுளாம், விநாயகப் பெருமானை பயணிகளும், பொதுமக்களும், வணிகர்களும் வணங்கி நமது கடமைகளைத் துவங்க வசதியாக திருத்தணிகை நகரின் மையப் பகுதியில் அமைந்த திருக்கோயில் சுந்தர விநாயகர் திருக்கோயில் ஆகும். நவகிரகங்களுக்காக அமைக்கப்பெற்றுள்ள தனி சந்நிதி இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.