தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சி சந்திப்பில் இருந்து சுமார் 4 கீ.மி தொலைவில் புளியக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி உடனுறை அருள்மிகு கற்பூரவல்லி அம்பாள் திருக்கோயில் காலத்தால் பழமைமிக்க திருக்கோயிலாகும். திருக்கோயிலின் வடிவமைப்பினை நோக்கும் பொழுது பிற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இறைவன் பெயர் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி இறைவி பெயர் அருள்மிகு கற்பூரவல்லி அம்பாள் இத்திருக்கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனி சன்னதிகள் எழுப்பட்டுள்ளது. உத்தேசமாக 1920 ஆம் ஆண்டில் கும்பாசிஷேகம் நடைபெற்றதாக ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்டது. பின்பு 15.07.2013 அன்று ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது. திருக்கோயில் வரலாறு 1.இவ்வூரில் இருந்த அடர்ந்த காட்டில் பிற்கால சோழ மன்னன் பாசறை அமைத்து போர் பயிற்சி அளித்து வந்தான். 2.எங்கு...