இத்திருக்கோயில் அரக்கோணம் - திருவாலங்காடு நெடுஞ்சாலையில் அரக்கோணத்தில் இருந்து 10 கி. மீ. தொலைவில் நெடுஞ்சாலையிலிருந்து தென் திசையில் ஒரு கிலோ மீட்டம் தொலைவில் இயற்கையெழில் நிறைந்த சூழலில், மரம், செடிகள் அடர்ந்த இடத்தில் அழகாக அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து நடந்து சென்றே இத்திருக்கோயிலை அடைய முடியும், மிகச் சிறிதாக அமைந்துள்ள இவ்வாலயத்தில் அருள்மிகு இராம பக்த ஆஞ்சநேயப்பெருமான் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் இருகரங்களையும் கூப்பியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் ஆஞ்சநேயபுரம் என இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாகிய இரத்தினசபை அமைந்த திருவாலங்காட்டிற்கு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளமை மேலும் சிறப்பு சேர்க்கிறது.