அப்பர் பெருமானால் விண்ணுலகம், மண்ணுலகம் போற்றும் திருத்தலம் எனப்புகழப்படுவது இத்திருக்கோயில் ஆகும். மூங்கில் புதரில் இருந்து (பாசு - மூங்கில்) இத்தலத்து இறைவன் தோன்றியமையாலும், மூங்கில் இத்தலத்து விருட்சமானதாலும், திருப்பாச்சூர் என இத்தலம் பெயர் பெற்றது. மூங்கில் காட்டை அழிக்கும்பொழுது மரம் வெட்டுக் கருவியான வாசி பட்டு வடு உண்டாவதால் இத்தலத்து இறைவர் வாசீசுவர் என அழைக்கப்பெறுகிறார்.
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 08:00 PM IST - 06:00 AM IST | |
| இத்திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு,மீண்டும் மாலை 4.00 மணிக்கு வழிபாடு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும்.(விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது) | |