அருள்மிகு மகிஷாசூரமர்த்தினி அம்மன் திருக்கோயில், மத்தூர், இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மகிஷாசூரமர்த்தினி அம்மன் பூமியிலிருந்து வெளிப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆகின்றன. அன்னை அநேக ஆண்டுகளாக பூமிக்குள் இருந்தபோது அந்தப்பகுதி சக்திமேடு என்ற பெயர் பெற்றது. அங்கு உச்சிப் பொழுதிலோ, இரவு நேரத்திலோ வருவோரை ஒரு பராசக்தி தன் பேரொளியில் மூர்ச்சையுறச் செய்து வந்த காரணம் தெரியாத ஒரு பயபக்தி அந்த இடத்திற்கு சென்றவர்களுக்கு இருந்தது. அன்னையின் வெளித்தோற்றத்திற்கு பிறகு அத்தகைய நிகழ்ச்சிகள் இன்று வரை ஏற்பபட்டதில்லை.