காஞ்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் போல இங்கும் இத்திருக்கோயில் அடுத்த மேல்புறம் அருள்மிகு பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் உமை காமட்சியாக அவ்வுலகிற்கு வந்து உயிர்களின் மீண்டும் மீண்டும் பிறந்து அறந்து உழன்று இளைக்கும் பிறப்பிணியைத் தீர்க்கும் பொருட்டு, நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகளின் இளங்குடல் மருத்தின் வெப்பம் தாங்காது என்ற குழந்தையின் தாயே மருந்து உண்து குழந்தையின் நோய் தீர்ப்பது போல, சிவ வரம்பொருளைப் பூசித்து அறங்கள் முப்பத்திரண்டும் ஆற்றி மண்ணுயிர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் நசிக்கவும்உயிர்கள் செய்யும் பிழைகளை இறைவன் மன்னித்தருளவும் வரம்...