(கண் நோய் நிவர்த்திஸ்தலம்) திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோவிலில் பல வருடங்களாக அமுதுபடையல் விழா(சிறுத்தொண்ட நாயனார்வரலாறு ) மிக சிறப்பாக நடைபெறும்.நயனம் என்றால் கண் என்று பொருள். வரதீஸ்வரர் என்பதற்கு கொடுப்பவர் என்று பொருள்.இதனால் சுவாமி பெயர் நயனவரதீஸ்வரர் (கண் கொடுப்பவர்) ஊர் பெயர் கண்கொடுத்தவனிதம்