சென்னை - 33, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மாம்பலம் இரயில் நிலையத்திற்கு அருகில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் தி.நகர். மேட்லி சுரங்க பாதை அருகிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும், இத்திருக்கோயில் தென்னிந்தியாவின் முக்கியம் வாய்ந்த சிவாலயமாகும். மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலானது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை மாநகரத்தின் வணிக பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பக்கத்தில் ஏழு நிலை ராஜகோபுரமும், தெற்கு புறத்தில் 5 நிலை ராஜகோபுரமும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.