இத்திருக்கோயில் மிகவும் பழமையானதும், 108 திவ்ய திருத்தலங்களில் 20 வது திவ்ய ஸ்தலமாகவும் திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலாகவும் உள்ளது. இங்கு ஆண்டில் இரண்டு முறை நிகழ்ந்து வரும் கல்கருட சேவை உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஆரிடம், பௌராணிகம், ஸ்வயம் வியக்கதம், திவ்யதேசம் என்கிற நால்வகை சிறப்பும் உடைய இத்திருத்தலத்தை சுகந்தகிரிஷேத்திரம் என்றும் சுகந்த வனம் என்றும் சித்தி ஷேத்திரம் என்றும் துவாதசாஷர ஷேத்திரம் என்றும் பஞ்சவியூகத்தலம் என்றும் பஷிராஜன் ஷேத்திரம் என்றும் மணிமாடக்கோயில் என்றும் புராணங்களும் வரலாறும் போற்றுகின்றன.