ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டெனெம்மானே.(3418) என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அருளிச்செய்தவாறு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சார்ங்கபாணிசுவாமி திருக்கோயில் குடந்தையின் நடுநாயகமாய் காவிரி மற்றும் அரசலாறு ஆறுகளினிடையே அமைந்துள்ளது. திருக்கோயிலின் பின்புறம் பொற்றாமரைத் திருக்குளம் (தெப்பக்குளம்) அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் மற்றும் மகாமக திருக்குளம் உள்ளது. இத்திருக்கோயில் ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது திவ்ய தேசமும் மற்றும் பஞ்சரங்கத்தில் ஒன்றான மகாமக வைணவத் திருக்கோயிலில் முதன்மையான திருக்கோயில் ஆகும்.
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 05:00 PM IST - 09:00 PM IST | |
| 12:00 PM IST - 12:30 PM IST | |
| 09:00 PM IST - 09:30 PM IST | |
| விஸ்வரூபம், திருவனந்தல், திருப்பாவை சேவாகாலம், காலசந்தி திருவாராதனம், திருப்பாவை சாற்று முறை, உச்சி காலம், நடை சாத்துதல், சந்நிதி திறப்பு, நித்யானு சந்தானம் சேவாகாலம், சாற்று முறை, இரண்டாம் கால திருவாராதனம், அர்த்த ஜாமம், நடை சாத்துதல் | |