முன்னொரு காலத்தில், உத்ராயண புண்ய காலத்தில் ஸ்ரீ கும்பலிங்கேசரைத் தரிசிக்க விருப்பங்கொண்ட மூவுலகோரும், திருக்குடந்தையிலே வந்து கூடினார்கள், அது பொழுது, கரும்பு வியாபாரியான வைசியனொருவன் மிகச் செழுமையான ஒர் ஆயிரம் கரும்புகளை ஒர் வண்டியில் ஏற்றி வந்து, இவ்வாலயத்திற்கு அருகில் நிறுத்தினான். ஸ்ரீ விநாயகர், அந்த வணிகனிடம் விளையாடி அருள்புரிய திருவுளங்கொண்டு ஒரு பிராமணச் சிறுவனாய் அவதாரங்கொண்டு, அவ்வணிகனிடம் போய் நல்லவரே கரும்பை பார்த்து என் வாய் ஊறுகிறது. அதை வாங்கவோ கையில் காசில்லை. எனவே ஒரு கரும்பு தந்து உதவினீரானால் உமக்கு எல்லா நன்மையும் உண்டாகும் என கேட்க, அந்த வணிகனோ, கரும்புகள் விற்பதற்கு கொண்டு வந்துள்ளேன், காசில்லாமல் பேசாதீர்,...