பெரம்பூர் பெரிய கிராமம் இங்குள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கூடியதாய் கிழக்கு நோக்கி அமைந்துள்ளுது ராஜகோபுர நுழைவாயிலில் விநாயகர், இடும்பன் சன்னதிகள் உள்ளன உட்புறம் வசந்த மண்டபமும் வசந்த மண்டபம் எதிரே ஸ்ரீ கந்த புஷ்கரணி என வழங்கும் தீர்த்தகுளமும் அமைந்துள்ளது. பிரதான ஆலயம் முருகப்பெருமானுக்குரியதாக விளங்குகிறது. மகா மண்டபத்தில் அருள்மிகு தெய்வசேனை தனி சன்னதியும் உள்ளது. கர்ப்பகிரகத்தில் முருகர் வள்ளி தெய்வாணை சமேத ஆறுமுகப்பெருமானாக பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். மகா மண்டபத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் இவ்வூருக்குகொண்டு வரப்பட்ட விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ...