இத்திருக்கோயில் சிவ வழிபாட்டிற்காய் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிவாலயம் ஆகும். இங்கு சனீஸ்வரர் தன் இரு மனைவிகளுடனும் குழந்தைகளுடனும் எழுந்தருளியுள்ளார். அவரது மனைவியர் மந்தா தேவி மற்றும் ஜேஷ்டா தேவி ஆவர். அவரது குழந்தைகள் மாந்தி மற்றும் குளிகன். இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பும் வழியில் அனுமருடன் இங்கு வந்து வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி திருவிழாவும் மாந்தி பரிகார பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.