அகண்ட பரிபூரண சற்குணநாதனாம் அநாதிமலமுத்த பதியாகிய சிவபெருமான், இப்பூவுலகின்கண் ஆன்ம கோடிகள் துன்பம் நீங்கி, இன்பம் பெற்றுய்யும் பொருட்டு ஆங்காங்கே திருவருளே திருமேனியாய் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்கள் மிகப்பலவாம். அவற்றுள் சோழவள நாட்டின்கண் காவிரித் தென்கரைத் தலங்களில் 69-வது தலமாக மேன்மை பெற்று விளங்குவது இக்கருக்குடி என்று அழைக்கப்படும் மருதாநல்லூர் ஆகும். இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகைச் சிறப்பினை உடையது. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள கருக்குடிநாதர் பிருதிவி மூர்த்தியாகும். மாதவனான இராமபிரான் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து, போதத்தால் சிவ பூஜை செய்து, வழிபட்ட பெரும் பேறுடையது....