மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தர்காடு கிராமத்தில் தென்கிழக்கு பாகத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை புகைவண்டி நிலையத்திலிருந்து தென்மேற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புழுத்த மனத்தடியேனுக்கு வழி என்ன என்று வணங்கி நிற்கும் போது அதன் கீழ்பாலுள்ள ஆலமரங்கள் நிறைந்துள்ள இடத்தில் இருக்கும் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வந்தால் அதில் ஒரு ஆலமரம் பட்டு போயிருக்கும். அது என்று துளிர்விடுகிறதோ அன்று நீர் முக்தி அடைவீர் என்று இறைவன் அசரீரியாக எழுந்தது. அதன்படி மேற்கூறிய சம்பந்தர் வழிபட்டு ஓய்வு பெற்ற இடம் தான் இந்த ஆலந்துறையப்பர். ஆலந்துளிர் அப்பர், தற்போது நாளடைவில் மருவி ஆலந்துறையப்பர் என்று வழங்கப்படுகிறது.