செங்கல்பட்டு மாவட்டம்,சிங்பெருமாள்கோயில் அடுத்து 8 கிலோமீட்டர் தொலைவில் அனுமந்தபுரம் என்ற இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்திர சுவாமி எழுந்தருளியுள்ளார். சுவாமி நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவமும் பொருந்தி ஒரு கையில் கத்தியும் கேடயமும் மற்றொரு கையில் வில்அம்பு ஏந்தியும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்.இத்திருக்கோயிலானது 16-ம் நூற்றாண்டை சார்ந்த பழமையான திருக்கோயிலாகும்.சுவாமியின் எதிரே சிவபெருமானின் வாகனமான நந்திதேவர் மற்றும் தனி சன்னதியில் பத்ரகாளி அம்மன் காட்சியளிக்கின்றார். பிரகாரத்தை வலம்போது துர்க்கை,மகாவிஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய தெய்வங்கனை சுற்று கோஷ்டத்தில் அமைந்துள்ளது. சுவாமியை வழிபடுவதன் மூலம் தீயசக்திகள் விலகி நன்மையை உண்டாக்கும்.இங்கு குலதெய்வ வழிபாடு மிகவும்...