அனைவராலும் போற்றப்படும் ராமபிரானுக்கு செங்கல்பட்டில் தனி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் ராமபிரான் எப்படி பட்டாபிஷேகத்துடன் காட்சி அளிக்கின்றாரோ அதேபோல் செங்கல்பட்டிலும் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் இதயம் போன்று மையப்பகுதியில் பாலாற்றங்கரை கிழக்கில் கடல் போல் விரிந்துள்ள மூம்மலைகளின் அடிவாரத்தில் எழில் மிகுந்ததாக அமைந்துள்ள செங்கல்பட்டில் வரலாற்று சிறப்புமிக்க கோதண்ட ராமர் கோயில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சன்னதிகள் இத்திருக்கோயிலில் மூலவர் கோதண்டராமர் சீதாதேவி லட்சுமணர் பரதன் சத்ருக்கணன் அனுமன் ஆகியோருடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார் அருள் பாலிக்கிறார் மேலும் பெருந்தேவி தாயாருடன் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சன்னதி சனி பகவானை சம்ஹாரம் செய்யும் கால வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆண்டாள் கண்ணன் ஆண்டாள்...