இக்கோயில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது. தஞ்சையையும், பழையாறையையும் தலைநகரங்களாகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இங்குப் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம்) இருந்ததாகக் கூறப்படுவதால் கம்பட்ட விசுவநாதசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது. கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய என அகநானூறு கூறுகிறது.குடந்தையில் சோழரின் கருவூலம் இருந்ததாம். அதனை நினைவூட்டும் சான்று கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்.