காஞ்சிபுரம் மாவட்டம். குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னை பாரிமுனையிலிருந்து தென்மேற்கே சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல்லாவரத்திற்கு மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து வடகிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவிலும்,அமைந்துள்ளது. குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் தேவியர் இருவருடன் குன்றிலமர்ந்த பெருமான் வடதிசை நோக்கி அமர்ந்து முருகன் அருள்பாலிப்பது இத்தலத்திற்கு ஒரு தனிச் சிறப்பு. இத்திருத்தலமானது திருமண பிரார்த்தனை ஸ்தலமாக திகழ்கிறது. . .