ஒப்பேதும் இல்லா குன்றை முனிவர் எனப் போற்றப்படும் சேக்கிழார் பெருமான் பிறந்த ஊர் குன்றத்தூர் ஆகும். சான்றோர் பலர் வாழுஞ் சால்புடையது. தொண்டை நன்னாடு அந்நாட்டில் 24 கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர் கோட்டத்தைச் சேர்ந்த குன்றை வள நாட்டில் விளங்குவது குன்றத்தூர் என்னும் நற்றவப்பதி அவ்வூரில் சேக்கிழார் என்னும் திருமரபு சிறந்திருந்தது. சோழ மன்னன் முற்காலத்தில் தொண்டை மண்டலத்தில் குடியேற்றும் பொருட்டு தேர்ந்தெடுத்த நாற்பத்தெண்ணாயிரம் நற்குடிகளும் ஒன்று சேக்கிழார் மரபு. இத்திருமரபிலே நாடு உய்ய அருள்மொழித் தேவர் அவரித்தார். சேக்கிழார் என்பது குடிப்பெயர் தாய் தந்தையர் இட்ட பெயர் அருள்மொழித் தேவர். அருள்மொழித்தேவர் வெள்ளியங்கிரி முதலியார் அழகம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சேக்கிழார் சுவாமிகள் அவதரிக்க தவஞ்செய்தது வேளாளர் குலம். சோழவள நாட்டை இனிது அரசு புரிச்து...