அஹீந்த்ரன் என்றால் ஆதிசேஷன். இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அருகிலுள்ள மலை ப்ரும்மா தவம் செய்த இடம். அதனால் ப்ரும்மாசலம் என்றும், ஆஞ்சநேயனால் கொணரப்பட்ட ஔஷத மலையின் ஓர் பாகம் இதில் சேர்ந்திருப்பதால் ஔஷதாசலமென்றும் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட நதி பக்கத்தில் ஓடுகிறது. இந்நதி கருட நதியென்று பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறும் கோயிலில் இருக்கிறது. கோயிலிலுள்ள ப்ரதானமூர்த்தி தேவநாதன், அச்சுதன், ஸ்திரஜோதிஸ், அநக ஜோதிஸ், மேவு ஜோதி, மூவராகிய மூர்த்தி, அடியவர்க்கு மெய்யன், தெய்வநாயகன், தாஸஸத்தியன் முதலிய பல திருநாமங்களுள்ளவர். ப்ரும்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, ப்ருகு,...