இந்நடுநாட்டில் புகழ்பெற்ற நகரமாக கிடங்கில் என்ற பெயருடன் திண்டிவனம் சிறப்புற்று விளங்கியுள்ளது. சங்க காலத்தில் ஓய்மா நாடு எனப்பட்ட பகுதியில் கடங்கில் அமைந்திருந்தது. ஓய்மான்கள் ஆண்ட நிலப்பகுதியே ஓய்மா நாடு எனப்பட்டது. இவ்வூர் திந்திருணிவனம் எனவும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றுள்ளது. திந்திருணி என்பது புளிய மரத்தைக் குறிக்கும் வனம் என்பது காடுகளைக்குறிக்கும். இவ்வூர் புளிய மரங்கள் அடங்கிய காடுகள் நிறைந்திருந்த பகுதியாதலால் திந்திருணிவனம் எனப்பட்டது.எனவே தான் இத்தலத்திறைவன் திந்திரிணீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருளாட்சி புரிகின்றார். திண்டி என்ற முனிவர் வழிபட்டதால் இத்தலம் திண்டீச்சுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இத்திண்டீச்சுரமே மருவி திண்டிவனம் எனப்பெயர் பெற்றுள்ளது.