திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் நட்சத்திரதோஷம் செய்யப்படுவதால் இக்கோயில் நட்சத்திரக்கோயில் எனவும் கூறப்படுகிறது. நட்சத்திரக்கோயில் என அழைக்கப்படும். சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இத்திருக்கோயில் கற்களால் கட்டப்பட்ட கற்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபம், முன்மண்டபம் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள விமானத்தையும் கொண்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து கலசபாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது பஸ், ஆட்டோ வசதியும் அதிகளவு உள்ளது.