திருவட்டப்பாறையில் சிவபெருமான் லிங்கேஸ்வரர் என்ற பெயரில் அருவமாகக் காட்சி தருகிறார் என்பது ஐதிகம். திருவட்டப்பாறையில் அருவமாக இருக்கும் லிங்கேஸ்வரரை தரிசித்தால், தீராத சிக்கல்களும் தீரும். அண்ணன் - தம்பிகளுக்கிடையே இருக்கும் சொத்துப் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. பொய் சத்தியம் செய்தவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டிய முத்தாம்பிகையை வழிபட்டு, அனைத்து நன்மைகளையும் பெறுவோம்