கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து தென்மேற்கு 26கி.மீ. தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம், இதிலிருந்து கிழக்கே 2கி.மீ தூரத்தில் புண்ணிய சிவத்தலமான திருமூலஸ்தானம் அமைத்துள்ளது. இதன் மிக அருகாமையில் திருநாரையூர்,சதுர்வேதமங்கலம், கானாட்டுமுள்ளூர், ராஜேந்திரசோழகன், மேலக்கடம்பூர், ஒமாம்புலியூர் உள்ளது. திருமந்திரம் படைத்த திருமூலர் சிதம்பரம், திருவிடைமருதூர் செல்லும் வழியில் இத்திருத்தலத்தில் பலகாலம் தங்கி இங்கு உறைந்துள்ள சிவபெருமானை வணங்கியுள்ளார். திருமூலர் வணங்கியதால் இந்த சிவனாருக்கு திருமூலநாதர் எனப் பெயராயிற்று. இதனால் இவ்வூர் திருமூலஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருமூலநாதர் நோய் தீர்க்கும் ஆண்டவனாக உள்ளார். 3 முழு அளவே உள்ள சிவலிங்கத்திருமேனி ஆகம முறைப்படி நோய் தீர்க்கவே அமைந்துள்ளது. இத்தலத்தின் தனிசிறப்பாகும். இந்கு சனீஸ்வரன் விநாயகரை பிடிக்க வரும்போது விநாயக்பெருமான் தெற்கு அமர, அது முடியாமல் போகவே சனீஸ்வரனும்...