இத்திருக்கோயில் திருவண்ணாமலை நகர், இராஜராஜன் தெருவில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு ஸ்ரீ வாசவி. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அன்னை சக்தி தேவி சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை ஸ்ரீ வாசவி. கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு உருவானது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பேனுகொண்டா நகரத்தில் விருபாட்சன் - வாஸம்பா தம்பதிகளுக்கு சித்திரை மாத வளர்பிறை தசமியில் தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி.குசுமாம்பிகா என்பது அன்னையின் இயற்பெயர். அழகிய மங்கையாக வளர்ந்த அன்னையைக் கண்டு ஆசைப்பட்டான் விஷ்ணுவர்த்தனர் என்ற அண்டை நாட்டு அரசன். தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும் மிரட்டினான். ஊரே கூடி அன்னை வாசவி என்ன...