அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்பு செய்யாற்றங்கறையில் வடமேற்கு பகுதியில் சிறிய குன்றின்மீது சின்னய்ய சித்தர் என்பவரால் திருவேல் ஊன்றி அழகுற அமைந்த அருள்மிகு வள்ளி தெய்வானை அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இத்திருக்கோயிலின் இராஜகோபுரமானது 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.