சென்னை-118, முத்தமிழ் நகர், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட பட்டியலில் சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். பவானி அம்மனை மூலவராக கொண்டும் இத்திருக்கோயிலில் பராசக்தி விநாயகர், முருகர் மற்றும் ஐயப்பன் சன்னதிகளுடன் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.