கரூர் மாவட்டம்,குளித்தலை வட்டம், முத்துபூபாலசமுத்திரம் என்னும் இடத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் சுற்றுபுற பகுதியிலில் பிரபலமாக சிவன் கோவிலாக அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் எம்.பி.எஸ் என அழைக்கப்படும் அக்ரகாரத்தின் கீழ் பகுதியில் காவிரி ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இச்சிவலிங்கத்தை வழிபடுபவர்களுக்கு மனத்திலும், அறிவிலும், உடலிலும், தெளிவும், ஆரோக்கியமும், உற்சாகமும் அபரிமிதமாக பெருகும். அனுதினமும் வணங்கி பூஜிப்பவர்களுக்கு சகல செல்வமும் கொழிக்கும். பிரசிதிபெற்ற திருக்கோயிலாகும்.