புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் அறந்தாங்கியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு பார்த்த காளியாக இருந்து வருகிறது. இத்திருக்கோயில் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 9.00மணி வரை நடை திறக்கப்படுகிறது. மேலும் தினசரி நான்கு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் வருடாந்திர திருவிழா ஆடி மாதம் முழுவதும் தேரோட்டம், தெப்பம் உட்பட திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் 9-நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் தினசரி அன்னதானத்திட்டம் உபயதாரர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது நாள் 1-க்கு ரூ.3500/- செலுத்தி இத்திட்டத்தில் பங்கேற்கலாம். இத்திருக்கோயில் பிள்ளை தத்து கொடுத்தல் மற்றும் திருமண தடைகள் நீங்கும்...